ஹார்முஸ் நீரிணை பிரச்சினையில் உதவாததால் நேட்டோ நாடுகளை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கா இல்லையெனில் நேட்டோ பலவீனமானது என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் தாக்கிய தென் பார்ஸ் எரிவாயு வளாகம் மத்திய கிழக்கில் தீவிர பதற்றத்தை கிளப்பியுள்ளது. பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
முதல்வர் பதவி வாய்ப்பு வந்தபோதும் கூட்டணி அரசியலை நிராகரித்ததாக தகவல்கள் வெளியாக, விஜய்யின் நிலைப்பாடு கவனம் ஈர்க்கிறது. “மக்களுடன் மட்டும் கூட்டணி” என்ற அவரது கருத்து தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது.
ஈரானுக்கு எதிரான போரை ஆதரிக்க முடியாது எனக் கூறி அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் முக்கிய அரசியல் தலைவரான அலி லாரிஜானி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவலை ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
காபூலில் உள்ள மறுவாழ்வு மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகின்ற நிலையில், பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இளைஞர் ஒருவர் தனது இரட்டை சகோதரியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் நடுவில், ஈரான் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு மற்றும் உலக பொருளாதார தாக்கம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் தாக்கல், பரிசீலனை மற்றும் வாக்கெண்ணிக்கை தொடர்பான முழு கால அட்டவணை வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க உலக நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். புதிய சிஇஓ தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடரவுள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஈராக் வான்பரப்பில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்தியதாக ஒரு ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது.