காவலர்களை ஆபாசமாக பேசிய காதல் ஜோடி.. நடந்தது என்ன?

நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
காவலர்களை ஆபாசமாக பேசிய காதல் ஜோடி.. நடந்தது என்ன?

நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். 

சென்னை மெரினா கடற்கரையில், நேற்று நள்ளிரவு வாகனங்களை எடுக்கச்சொல்லி காவலர்கள் சந்திரமோகன் மற்றும் அவரது தோழியை அறிவுறுத்தியுள்ளனர். அப்போது காவலர்களை தகாத வார்த்தையிலும், ஆபாச வார்த்தையிலும் பேசிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

இதனை அடுத்து, சென்னை மெரினா லூப் சாலையில் காவலர்களை ஆபாசமாக பேசி மிரட்டிய விவகாரம் தொடர்பாக காவலர் சிலம்பரசன் மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதாவது, நள்ளிரவில் மெரினாவில் லூப் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றும் படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது சந்திர மோகன் என்பவரை வாகனத்தை எடுக்கச்சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். 

அப்போது அவர், “நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பாக்குறியா” என பேசியதோடு, “உன்னால் முடிந்ததை பாரு.. நான் குடித்து தான் இருக்கேன்.. என்னால் காரை எடுக்க முடியாது.. நாளை காலையில உங்க அட்ரஸ் எடுத்து எல்லாத்தையும் காலி பண்ணி விடுவேன்” என மிரட்டி உள்ளார்.

மேலும், ஆபாசமாக தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதனடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பணி செய்யவிடாமல் ஆபாசமாக பேசி மிரட்டியதாக மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி வந்த நிலையில் இருவரையும் கைது செய்தனர். ஆபாசமாக பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருவரையும் வேளச்சேரியில் இருக்கும் தங்கும் விடுதியில் வைத்து கைது செய்துள்ளனர். அப்போது, என்னை என் பிள்ளைகள் முன்னிலையில் அழைத்து வந்து விட்டீர்கள். 

இதற்கான தண்டனையை நிச்சயம் பெறுவீர்கள்? நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் அடித்தீர்கள் என போலீசார் முன்பு அழுதுகொண்டே கதறியுள்ளார்.

15 வருடங்களாக இருவரும் தகாத உறவில் இருந்து வருவதாகவும், தினமும் மெரினாவில் காரில் வந்து குடிப்பதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணம் நடைபெற்று பிள்ளைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

துணை முதலமைச்சரின் பெயரை தவறுதலாக கூறிவிட்டதாகவும் சந்திரமோகன் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார். சந்திரமோகன் வேளச்சேரியில் காரை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து தொழில் நடத்தி வருவதாக விசாரணையில் தெரிவந்துள்ளது.

அதன் பின்னர், தான் குடி போதையில் இருந்ததால் தான் பேசுவது தெரியாமல் பேசிவிட்டதாகவும், மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் இனி ஒருபோது காவலர்களை எப்போது மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர