வங்காளதேச அதிபர் முகமது சஹாபுதீன் ராஜினாமா: பதவி காலம் முடிவதற்கு முன் விலகல்
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் அதிபர் முகமது சஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் அதிபர் முகமது சஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
76 வயதான முகமது சஹாபுதீன், கடந்த 2023 ஏப்ரல் மாதம் வங்காளதேசத்தின் அதிபராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு வரை இருந்த நிலையில், தற்போது அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அதிபர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது ராஜினாமா தொடர்பான மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முகமது சஹாபுதீன், வங்காளதேசத்தின் 22வது அதிபராக பதவி வகித்து வந்தார். அவரது பதவி விலகல் அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.