தொடர்ச்சியாக ஆட்டங்காட்டும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!
செப்டெம்பர் 19 இன்றைய நிலவரப்படி 22 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 1,040 ரூபாயால் அதிகரித்து ஒரு பவுண் 1,14,280 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
செப்டெம்பர் மாத ஆரம்பம் முதலே சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வந்த நிலையில், இன்று சனிக்கிழமையும் ஆபரணத் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 145 ரூபாயால் உயர்வடைந்து, ஒரு கிராம் 14,155 ரூபாய்க்கும், ஒரு பவுண் 1,160 ரூபாயால் அதிகரித்து 1,13,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி 22 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு மேலும் 130 ரூபாயால் அதிகரித்து, ஒரு கிராம் 14,285 ரூபாயாகவும், ஒரு பவுணின் விலை 1,040 ரூபாயால் உயர்வடைந்து 1,14,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அதேவேளை, 18 கரட் தங்கத்தின் விலையிலும் இன்று கிராமுக்கு 130 ரூபாய் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிராம் 18 கரட் தங்கம் 12,055 ரூபாயாகவும், ஒரு பவுண் 1,040 ரூபாய் அதிகரித்து 96,440 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.