- ADVERTISEMENT -

கொழும்பு

லிட்ரோ - லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மார்ச் இறுதி வரை எரிவாயு விலையில் மாற்றமில்லை என லிட்ரோ அறிவிப்பு. சந்தை நிலைமைகள் உறுதியற்றதால் லாஃப்ஸ் முன்னறிவிப்பு வழங்க முடியாது என விளக்கம்.

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கிய 76 வெளிநாட்டு பிரஜைகள் கைது… நாடுகடத்த நடவடிக்கை

சட்டவிரோதமாக தங்கியிருந்த 76 இந்தோனேசியர்கள் இலங்கையில் கைது. அவர்களை விரைவில் நாடுகடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

QR சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன – மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமையில் ஏற்பட்ட பெரும்பாலான தொழில்நுட்ப சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

'நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது'

நாட்டில் நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார சவால்களை சமாளிக்க அரசாங்கம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 7.30 மணிக்கு ஜனாதிபதி சிறப்பு ஊடக சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கும் வாரந்தோறும் புதன்கிழமை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

நிலவும் எரிபொருள் விநியோக சிக்கலை முன்னிட்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச ஊழியர்களுக்கும் அதே நாளில் விடுமுறை வழங்கப்பட்டதன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் ஈரானுக்கு அனுப்பி வைப்பு

இலங்கைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட IRIS DENA கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் உடல்கள் இன்று ஈரானுக்கு அனுப்பப்படுகின்றன.

டீசல் விலை உயர்வு: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து கட்டணத்தை இன்று (10) முதல் 5 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த, நலின் பெர்னாண்டோ மேல்முறையீடு: இரண்டாவது நாளாக விசாரணை

முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (10) இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயருமா? வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது.

கடலில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பல்: 80 உடல்கள் மீட்பு; 35 பேர் உயிர் தப்பினர் - இலங்கை அருகே பயங்கரம்!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ தாக்குதலில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் தேனா' (IRIS Dena) சிதைவுகளிலிருந்து இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அருகே அமெரிக்கா அதிரடி: ஈரானியப் போர்க்கப்பல் தகர்ப்பு - 80 பேர் பலி; 35 பேர் மீட்பு!

இந்தியப் பெருங்கடலில் சர்வதேச நீர்ப்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்கா தனது டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார்