இலங்கை: பேரிடர் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து!
இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வென்னப்புவ–லுணுவில பகுதியில் நிவாரணப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர், ஜின் கங்கை என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த உறுப்பினர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில்.
