இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு இலங்கைப் பெண் உயிரிழப்பு!

இத்தாலியின் ரோம் நகரில் 38 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் அவரது இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய கணவர் கைது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு இலங்கைப் பெண் உயிரிழப்பு!

இத்தாலியின் ரோம் நகரில் இலங்கைத் தொழிலதிபர்/பெண்ணொருவர் அவரது இத்தாலியக் கணவனால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ரோம் நகரின் பிடேன் (Fidene) பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் 38 வயதுடைய இலங்கைப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, உயிரிழந்த பெண்ணின் கணவரான 41 வயதுடைய இத்தாலிய நபர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதில் மண்டையோடு உடைந்து, பலத்த இரத்தக் காயங்களுடன் படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய இத்தாலியக் கணவரை அந்நாட்டுப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி மற்றும் குடும்ப வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.