சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சீனாவின் வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ இன்று (12) காலை கட்டுநாயக்கில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

Published on: 12 Jan 2026, 10:51 am
Updated: 8 months ago

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சீனாவின் வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ இன்று (12) காலை கட்டுநாயக்கில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவர் ஆப்பிரிக்கா பயணத்தை முடித்து நாடு திரும்பும் வழியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இது 2022 ஜனவரி மாதத்திற்குப் பிறகு வாங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயம் எனக் கருதப்படுகிறது.

இந்த வருகையின் போது, 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மீள்சீரமைப்புப் பணிகளுக்காக சீனாவின் விசேட நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தனது இரண்டு நாள் பயணத்தில், வாங் யீ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.

மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அரசாங்க முக்கிய பிரமுகர்களுடன் விசேட கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உத்தேச ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாக கவனம் செலுத்தப்படலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW