கரீபியன் கடலில் அமெரிக்கா அதிரடி: போதைப்பொருள் கடத்தல் படகு தகர்ப்பு - 3 பேர் பலி!
கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்கப் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக 'ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்' (Operation Southern Spear) என்ற பெயரில் அதிரடி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்கப் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க தென்னகக் கட்டளைத் தளம் (SOUTHCOM) வெளியிட்டுள்ள தகவலின்படி, சந்தேகத்திற்குரிய அந்தப் படகு வழக்கமான கடத்தல் பாதையில் பயணித்தபோது ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்டது.
இதனுடன் தொடர்புடைய வீடியோவில், கடலில் சென்றுகொண்டிருந்த சிறிய படகு ஒன்று திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிவது பதிவாகியுள்ளது. இந்த நடவடிக்கையின் போது படகில் இருந்த போதைப்பொருட்களும் முழுமையாக அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இத்தகைய வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களில் இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கச் சிறப்புப் படைகள் கடந்த ஜனவரி மாதம் கைது செய்து, நியூயார்க்கிற்கு நாடு கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
