பிப்ரவரி 14ல் தனுஷுடன் திருமணமா? – மனம் திறந்த மிருணாள் தாகூர் விளக்கம்

தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்து சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு நடிகை மிருணாள் தாகூர் பதிலளித்துள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
பிப்ரவரி 14ல் தனுஷுடன் திருமணமா? – மனம் திறந்த மிருணாள் தாகூர் விளக்கம்

தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்து சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு நடிகை மிருணாள் தாகூர் பதிலளித்துள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது இருவரும் பிரிந்திருந்தாலும், குழந்தைகளை இணைந்து வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனுஷ் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்றும், அவர் மற்றும் மிருணாள் தாகூர் காதலித்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் பரவின. மேலும், இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டதும், சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் கருத்து பகிர்ந்ததும் இந்த வதந்திகளுக்கு காரணமாக கூறப்பட்டது. இதனால், பிப்ரவரி 14ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்ற பேச்சும் ரசிகர்களிடையே பரவியது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிருணாள் தாகூர் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். திருமணம் குறித்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், தாம் விரைவில் திருமணம் செய்யப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வதந்திகள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், யார் இப்படியான தகவல்களை பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Click for more latest சினிமா news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர