துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் பலி, 2 பேர் காயம்

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் பலி, 2 பேர் காயம்

நவகமுவ, கொரத்தொட்ட மணிககர சாலைப் பகுதியில் இரவு 10.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு மூன்று ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்ற இருவர் காயமடைந்து ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நவகமுவ பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.