2026 தொடக்கத்தில் இலங்கை சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2026 ஆம் ஆண்டின் முதல் காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக Sri Lanka Tourism Development Authority (SLTDA) அறிவித்துள்ளது.

2026 தொடக்கத்தில் இலங்கை சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2026 ஆம் ஆண்டின் முதல் காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக Sri Lanka Tourism Development Authority (SLTDA) அறிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 12 வரை மொத்தம் 401,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதில், பிப்ரவரி 12ஆம் தேதி மட்டும் அதிகபட்ச தினசரி வருகை பதிவாகி, அந்த நாளில் 12,731 பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

நாடு வந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் 70,880 பேர் வருகை தந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 44,053 பேரும், ரஷ்யாவிலிருந்து 36,949 பேரும், ஜெர்மனியிலிருந்து 28,332 பேரும், சீனாவிலிருந்து 22,309 பேரும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் 124,460 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் SLTDA மேலும் குறிப்பிட்டுள்ளது.