கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய் – பிப்ரவரி 23 முதல் மூன்று ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!
தற்போது செவ்வாய் மகர ராசியில் பயணித்து வருகிறது. பொதுவாக செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும்.
ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. கிரகங்களின் தளபதி என அழைக்கப்படும் செவ்வாய், தனது இடப்பெயர்ச்சியின் மூலம் பல ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. தற்போது செவ்வாய் மகர ராசியில் பயணித்து வருகிறது. பொதுவாக செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும்.
அந்த வகையில், மகர ராசியில் உள்ள செவ்வாய் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி சனி பகவானின் ஆதிக்கத்தில் இருக்கும் கும்ப ராசிக்குள் நுழைகிறது. சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி ஆக உள்ளது. இந்த கிரக மாற்றம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த காலத்தில் அதிக நன்மைகளை அனுபவிப்பார்கள் என ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 10ஆம் வீட்டில் பயணிக்க உள்ளதால் தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும் சாத்தியம் உள்ளது. வணிகம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். உடல்நலத்தில் இருந்த சிக்கல்கள் சரியாகும் வாய்ப்பும் உள்ளது.
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 9ஆம் வீட்டில் பயணிக்க இருப்பதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் காலமாக இது அமையும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். வெளிநாட்டு பயணம் அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. புதிய தொழில் முயற்சிகளை தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். வணிகத் திட்டங்கள் நல்ல லாபத்தை தரும் வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கையும் உயரக்கூடும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் முதல் வீட்டில் நுழைவதால் நிதி நிலைமை மேம்படும் என நம்பப்படுகிறது. சமூக மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகலாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு நீண்ட நாள் பிரச்சனைகள் தீரக்கூடும்.
பொறுப்பு துறப்பு: மேலே வழங்கப்பட்ட தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டவை.
