கொழும்பில் முக்கிய பகுதியில் சல்லாபம்: 16 வயது மாணவியும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவரும் கைது

ஜனவரி 5 மாலையில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பில் முக்கிய பகுதியில் சல்லாபம்: 16 வயது மாணவியும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவரும் கைது

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குப் பின்னால் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியுடன் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 5 மாலையில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாளிகாவத்தை காவல்துறையில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்; மற்றொருவர் கொத்தட்டுவ அம்பகஹவத்த பகுதியைச் சேர்ந்தவர்.

சம்பவத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் மாணவி, பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட பின்னர், பராமரிப்பு மற்றும் உரிய கண்காணிப்புக்காக கொழும்பு டி சொய்சா மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதேவேளை, கொழும்பு கோட்டை பொலிஸார் இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.