ஜாதகத்தில் சனி பகவானின் இருப்பிடம் – எந்த இடத்தில் என்ன பலன் தெரியுமா?

சனியின் பெயரை கூறி வசைபாடுவது வழக்கமாக இருந்தாலும், சனி பகவானின் தத்துவம் மிகவும் ஆழமானது. “சனி போல கொடுப்பாரும் இல்லை, சனி போல கெடுப்பாரும் இல்லை” என்பது சான்றோர் வாக்கு.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
ஜாதகத்தில் சனி பகவானின் இருப்பிடம் – எந்த இடத்தில் என்ன பலன் தெரியுமா?

சனிப்பெயர்ச்சி என்றாலே பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சங்கடங்களும் சோதனைகளும் தான். அசுப பார்வை, தாமதம், தடைகள் போன்றவை சனியுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

அதனால் சனியின் பெயரை கூறி வசைபாடுவது வழக்கமாக இருந்தாலும், சனி பகவானின் தத்துவம் மிகவும் ஆழமானது. “சனி போல கொடுப்பாரும் இல்லை, சனி போல கெடுப்பாரும் இல்லை” என்பது சான்றோர் வாக்கு. ஒருவரின் பாவ–புண்ணியத்திற்கு ஏற்ப தக்க பலனை அளிப்பவர் சனி என கருதப்படுகிறது.

ஜாதகத்தில் சனி எந்த ராசியிலும், எந்த பாவத்திலும் இருக்கிறார் என்பது அவரது பலன்களை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாகும். சனி உச்ச நிலை பெற்றிருந்தால், உழைப்பின் மூலம் உயர்வு, நிலையான செல்வம், சமூக மரியாதை போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு. தாழ்மையும் கட்டுப்பாடும் கொண்டவராக வளர்ச்சியடையச் செய்வார்.

3, 6, 10, 11ஆம் இடங்களில் சனி அமைந்திருந்தால், நிலம் வாங்குதல், வீட்டு வசதி, தொழில் முன்னேற்றம், நிரந்தர வருமானம், பெரியோரின் ஆதரவு போன்ற பலன்கள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

குறிப்பாக 10ஆம் பாவத்தில் சனி இருந்தால் உழைப்பின் மூலம் உயர்வு மற்றும் தலைமை பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு அதிகம். 8ஆம் பாவத்தில் சனி இருந்தால் சோதனைகள் இருந்தாலும் ஆயுள் நீடிப்பு கிடைக்கலாம் என்று ஜோதிடக் கருத்து உள்ளது.

Click for more latest ஜோதிடம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர