தை பௌர்ணமியில் உதயமாகும் சுக்கிரன்: இன்று முதல் அடுத்த 9 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணச்சிக்கல் இல்லை!
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்ற அம்சங்களுக்கு காரகனாக விளங்கும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார்.
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்ற அம்சங்களுக்கு காரகனாக விளங்கும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார். பொதுவாக ஒரு ராசியில் சுமார் ஒரு மாத காலம் தங்கும் சுக்கிரன், அவ்வப்போது அஸ்தமனமும் உதயமும் அடைவது வழக்கம். சுக்கிரனின் இவ்வகை நிலைமாற்றங்கள், மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது ஜோதிட நம்பிக்கை.
இதுவரை அஸ்தமன நிலையில் இருந்த சுக்கிரன், பிப்ரவரி 01 ஆம் தேதி மீண்டும் உதயமாக உள்ளார். இந்த நாளில் தை பௌர்ணமியும் வருவதால், தை பௌர்ணமி தினத்தில் சுக்கிரன் உதயமாகுவது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த கிரக மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றம், தொழில் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை நிலைத்தன்மை போன்ற சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகின்றன.
குறிப்பாக, சுக்கிரன் அடுத்த 9 மாதங்கள் சாதகமான நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு தீபாவளி வரை பணப்பிரச்சனைகள் இல்லாமல், அதிர்ஷ்டம் தொடர்ந்து துணை நிற்கும் காலமாக அமையும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தை பௌர்ணமியில் உதயமாகும் சுக்கிரனால் இன்று முதல் அடுத்த 9 மாதங்கள் நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகள் குறித்து பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 10-ஆம் வீட்டில் உதயமாவதால், தொழில் மற்றும் பணியில் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து லாபம் பெருகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பரம்பரை சொத்துகள் மூலம் எதிர்பாராத வருமானம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இதுவரை இருந்த பணச்சிக்கல்கள் படிப்படியாக தீரும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 8-ஆம் வீட்டில் உதயமாவதால், உறவுகளில் இருந்த குழப்பங்கள் விலகி, உறவுகள் வலுப்பெறும். அதிர்ஷ்டம் முழுமையாக கை கொடுக்கும் காலமாக இது அமையும். பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு அதிகரிக்கும். நீண்ட காலமாக கிடைக்காமல் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். குறைந்த முயற்சியிலேயே பெரிய வெற்றிகளை அடைய முடியும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புகளும் உருவாகும்.
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 7-ஆம் வீட்டில் உதயமாவதால், திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் உறவுகள் மேலும் வலுப்பெறும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். இதுவரை சந்தித்து வந்த பணப்பிரச்சனைகள் தீர்ந்து, பொருளாதார நிலை உறுதியாகும்.
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 11-ஆம் வீட்டில் உதயமாவதால், வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகமும் அமையலாம். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் அதிகரித்து, எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் ஜோதிட அனுமானங்கள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை முழுமையாக உறுதி செய்யப்பட்டவை அல்ல. தகவல் நோக்கத்திற்காக மட்டுமே இக்கட்டுரை வழங்கப்படுகிறது. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.
