சூரிய பெயர்ச்சி மற்றும் கிரகண யோகம்: இன்று முதல் 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கை!

பிப்ரவரி 13ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்பத்தில் ஏற்கனவே ராகு பயணித்து வருவதால், சூரியன்–ராகு சேர்க்கை உருவாகிறது.

சூரிய பெயர்ச்சி மற்றும் கிரகண யோகம்:  இன்று முதல் 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கை!

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக சூரியன் கருதப்படுகிறார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசி மாற்றம் செய்கிறார். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும் சூரியன் ராசி மாறும் போது புதிய தமிழ் மாதமும் தொடங்குகிறது.

அந்த வகையில், பிப்ரவரி 13ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்பத்தில் ஏற்கனவே ராகு பயணித்து வருவதால், சூரியன்–ராகு சேர்க்கை உருவாகிறது. இந்த சேர்க்கை “கிரகண யோகம்” என அழைக்கப்படுகிறது. ஜோதிடக் கருத்துகளின்படி, சூரியன் தன்னம்பிக்கை, அடையாளம் மற்றும் அதிகாரத்தை குறிக்க, ராகு குழப்பம் மற்றும் திடீர் மாற்றங்களை குறிக்கிறது. இந்த இரு கிரகங்களின் இணைவு சிலருக்கு மனஅழுத்தம், முடிவெடுப்பதில் குழப்பம் மற்றும் உறவுகளில் பதற்றம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ரிஷப ராசியினருக்கு இது தொழில் மற்றும் பணியிட தொடர்பான சவால்களை உருவாக்கக்கூடும். அலுவலக அரசியல் அல்லது மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே பொறுமையும் நிதானமும் அவசியம்.

சிம்ம ராசியினருக்கு திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவைப்படலாம். உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை தவிர்த்து, பேசும் போது நிதானமாக நடந்து கொள்ளுவது நல்லது.

விருச்சிக ராசியினருக்கு குடும்ப சூழல் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை அவசியமாக இருக்கலாம். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

கும்ப ராசியினருக்கு இந்த கிரகண யோகம் உடல் நலம் மற்றும் தனிப்பட்ட முடிவுகள் தொடர்பாக சற்று சவால்களை தரக்கூடும். பெரிய முதலீடுகள் அல்லது அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்த்து சிந்தித்து செயல்படுவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பொதுவான கணிப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்டவை. இதன் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகுவது நல்லது.)