இரண்டாவது முறை நடந்த ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமணம்: கண்கள் கலங்கிய ஜோடி

தென்னிந்திய திரையுலகில் பிரபல ஜோடியாக பேசப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்டகால காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

இரண்டாவது முறை நடந்த ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமணம்: கண்கள் கலங்கிய ஜோடி

தென்னிந்திய திரையுலகில் பிரபல ஜோடியாக பேசப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்டகால காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக இருந்த இவர்களின் உறவு, இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணமாகியதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் நடைபெறுமென முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் நகரில் உள்ள ITC Mementos மாளிகையில் திருமண விழா சிறப்பாக நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்திற்கு முன்பாக டின்னர், நீச்சல் குள பார்ட்டி, கிரிக்கெட் போட்டி, மெஹந்தி, ஹல்தி, சங்கீத் போன்ற நிகழ்ச்சிகள் களைகட்டின. குறிப்பாக சங்கீத் விழாவில் இருவரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடியதாக கூறப்படுகிறது.

காலை 10.15 மணியளவில் தெலுங்கு மரபுப்படி திருமணம் நடைபெற்றது. அதன் போது தங்களது நீண்டகால உறவு புதிய கட்டத்தை எட்டியதை நினைத்து இருவரும் உணர்ச்சி வசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதே நாளில் மாலை 4 மணியளவில் கொடவா மரபுப்படி மீண்டும் திருமண வைபவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஷ்மிகா கர்நாடக மாநிலத்தின் கூர்க் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவரது பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் இந்த இரண்டாவது திருமண நிகழ்ச்சி நடந்ததாக கூறப்படுகிறது.

மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

திருமண விழாக்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, சில நாட்களுக்கு சினிமா மற்றும் சமூக வலைதளங்களிலிருந்து ஓய்வு எடுத்து வெளிநாடுகளில் ஹனிமூன் செல்லும் திட்டமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.