கடுமையாக்கப்பட்ட கனடா தற்காலிக விசா விதிகள் – தமிழர்களுக்கு வெளியான எச்சரிக்கை
கனடாவிற்கு தற்காலிக விசாவில் பயணம் செய்துள்ளவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கு தற்காலிக விசாவில் பயணம் செய்துள்ளவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.
தற்காலிக விசாவில் நாட்டுக்குள் நுழைந்தவர்கள், அவர்களது விசா காலம் முடிவடைந்தவுடன் கட்டாயமாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறை மேலும் கடுமையாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக விசாக்களில் கனடாவிற்கு வருபவர்கள் காலம் முடிந்த பின் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக டிஜிட்டல் தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒருவர் நாட்டை விட்டு வெளியேறும் போது, அவர்களின் விவரங்கள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் விசா காலம் முடிந்த பின்னர் அந்த நபர் வெளியேறுகிறாரா என்பதை தானாக கண்டறியும் வசதி இல்லாததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையை மாற்றுவதற்காக புதிய கண்காணிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகவுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விசிட்டர் விசா உள்ளிட்ட பல்வேறு தற்காலிக விசாக்களில் கனடாவிற்கு பயணம் செய்துள்ள தமிழர்களுக்கும் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
