கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பெண்கள் மூவர் கைது
பாங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக 5 கிலோவிற்கும் அதிகமான குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மூன்று தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனையின்போது இவர்கள் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவர முற்பட்ட வேளையில் பிடிபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 கிலோகிராமிற்கும் அதிகமான 'குஷ்' மற்றும் 2.4 கிலோகிராம் 'ஹஷீஷ்' ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதான பெண்கள் 31, 36 மற்றும் 38 ஆகிய வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.