சிஎஸ்கேவின் தொடர் தோல்வியால் அதிரடி... அடியோடு மாற்றப்படும் சேப்பாக் ஆடுகளம்!

பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக திகழ்ந்த சென்னை சேப்பாக் மைதானத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வரலாற்று சாதனைகள் பல தகர்க்கப்பட்டன. 

சிஎஸ்கேவின் தொடர் தோல்வியால் அதிரடி... அடியோடு மாற்றப்படும் சேப்பாக் ஆடுகளம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டும் வருகிறது. இந்த மைதானத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹோம் கிரன்வுடாக பயன்படுத்தி வருகிறது. 

பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக திகழ்ந்த சென்னை சேப்பாக் மைதானத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வரலாற்று சாதனைகள் பல தகர்க்கப்பட்டன. 

குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சிஎஸ்கே அணியை தோற்கடித்தது . 
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல தோல்விகளை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே அணி தொடரைவிட்டு முதல் அணியாக வெளியேறியது. 

14 போட்டிகளில் ஹோம் கிரவுண்டில் 7 போட்டிகள் நடைபெறும் என்ற நிலையில், ஹோம் கிரவுண்டிலும் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து. 

இதனையடுத்து, மைதானத்தின் ஆடுகளத்தை கணிக்க முடியவில்லை என்றும் பவுண்டரி லைனின் ஓரத்தில் இருக்கும் சேதம் அடைந்தது தான் காரணம் என்றும் நிபுணர்கள் குற்றம்சாட்டினர். 

இந்த நிலையில், சென்னை எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் உள்ள ஆடுகளம் மற்றும் மைதானம் சுற்றி உள்ள புல் தரைகள் முழுவதும் மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செய்து வருவதுடன், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு முன்பாக சேப்பாக் மைதானம் சரி செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி டிசம்பர் மாதம் பணிகள் அனைத்தும் முடிவடையும் என தெரிவிக்கப்படுவதுடன், சென்னை சேப்பாக்கம் மைதானம் புனரமைக்கப்படுவதால், இந்திய மகளிர் மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.