போட்டிக்கு ரிசர்வ் நாள் ஏன் இல்லை? விதியை மாற்றிய பிசிசிஐ.. நடந்தது என்ன?

Key Points
  • இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
  • பின்னர், மே 17-ல் மீண்டும் போட்டிகள் தொடங்கியன.
போட்டிக்கு ரிசர்வ் நாள் ஏன் இல்லை? விதியை மாற்றிய பிசிசிஐ.. நடந்தது என்ன?

ஐபிஎல் 2025-இன் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மோதுகின்றன. ஆனால், மழை காரணமாக ஆட்டம் தாமதமாகி உள்ள நிலையில், ரிசர்வ் நாள் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு பிளேஆஃப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு போர் மற்றும் அட்டவணை நெருக்கடி காரணமாக பிசிசிஐ இந்த விதியை மாற்றி உள்ளது.

அண்மையில் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மே 17-ல் மீண்டும் போட்டிகள் தொடங்கியன.

நேரத்தை காப்பாற்ற, பிளேஆஃப் போட்டிகளுக்கு இடையே அதிக நாட்கள் இடைவெளி விட முடியவில்லை. எனவே, ரிசர்வ் நாள் நீக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆட்டம் ரத்தானால் லீக் சுற்றில் பஞ்சாப் அதிக நெட் ரன் ரேட் (NRR) வைத்திருப்பதால்,  அவர்களே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

அத்துடன், மும்பை நான்காவது இடத்தில் இருப்பதால், அவர்கள் தொடரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

இந்தப் போட்டி முதலில் கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு மழை அபாயம் இருப்பதால், அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியம் தேர்வு செய்யப்பட்டது. எனினும், துரதிருஷ்டவசமாக, இங்கும் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google