“இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” - அனுபமா பரமேஸ்வரனின் பதிவு இணையத்தில் வைரல்
“இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன், சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புதிய பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர், தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனுபமா வெளியிட்ட பதிவு பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அந்த பதிவில், “இன்றிலிருந்து என் வாழ்க்கையை நானே தேர்வு செய்கிறேன். இனி யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை. பயமின்றி, என் உண்மையான சுயத்தை மீண்டும் கண்டுபிடிக்கும் பயணத்தை தொடங்குகிறேன். ஒரு காலத்தில் என்னுடையதாக இருந்த வாழ்க்கையை மீண்டும் நேசிக்கத் தொடங்கியுள்ளேன். நீண்ட நாட்களாக சொல்ல முடியாமல் இருந்த ஒரு விஷயம் உள்ளது. இன்று அதைச் சொல்கிறேன்... உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடன் தொடர்ந்து பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு வெளியாகிய சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவு மற்றும் வாழ்த்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், சில மாதங்களுக்கு முன்பு அனுபமா பரமேஸ்வரன் ஒரு இளம் நடிகருடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது வெளியிட்டுள்ள இந்த உணர்ச்சிப்பூர்வமான பதிவு அந்த தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையதா என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகின்றனர்.
எனினும், அனுபமா பரமேஸ்வரன் தனது பதிவின் பின்னணி குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் மற்றும் யூகங்களுக்கு இதுவரை உறுதியான ஆதாரம் இல்லை.