'கஜினி' பட நடிகர் பிரதீப் ராவத் காலமானார்: திரையுலகில் சோகம்!

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத் காலமானார். அவருக்கு வயது 74.


'கஜினி' பட நடிகர் பிரதீப் ராவத் காலமானார்: திரையுலகில் சோகம்!

தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் பிரதீப் ராவத் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 4) மாலை மும்பையில் உயிரிழந்தார்.

பி.ஆர்.சோப்ராவின் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமனாக நடித்ததன் மூலம் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார் பிரதீப் ராவத். அதன்பின்னர், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லகான்' திரைப்படத்தில் தேவா சிங் சோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார்.

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த இரட்டை வேடம்தான். இந்தப் படத்தின் மூலம் தமிழ் மற்றும் இந்தி சினிமா உலகில் ஒரே நேரத்தில் புதிய உயரத்தை அடைந்தார். அதன்பின்னர், நடிகர் அஜித் நடித்த 'வீரம்' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இந்தி மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிப் படங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரதீப் ராவத் புகழ்பெற்றார். வில்லன் வேடங்களில் அவரது தனித்துவமான நடிப்பும், கம்பீரமான தோற்றமும் அவரை திரையுலகின் முன்னணி எதிர்நாயகர்களில் ஒருவராக உயர்த்தியது.

இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி, தொடர் சிகிச்சைகள் பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து ரசிகர்களை மகிழ்வித்தாலும், சில மாதங்களுக்கு முன் மீண்டும் நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மீண்டும் சிகிச்சை எடுக்கத் தொடங்கினார். கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் நேற்று (ஆகஸ்ட் 4) மாலை அவரது உயிர் பிரிந்தது. இது குறித்து அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதீப் ராவத்தின் மறைவு திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் செய்திகளைப் பதிவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற உள்ளன. வில்லன் வேடங்களில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் படைத்திருந்த பிரதீப் ராவத்தின் இழப்பு திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google