“திரிஷா ஒருநாள் முதலமைச்சராகலாம்” - இயக்குநர் பிரவீன் காந்தியின் கருத்து வைரல்

நடிகை திரிஷா எதிர்காலத்தில் முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
“திரிஷா ஒருநாள் முதலமைச்சராகலாம்” - இயக்குநர் பிரவீன் காந்தியின் கருத்து வைரல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து பயணித்து வரும் நடிகை திரிஷா குறித்து, இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள திரிஷா, தனது ஆரம்பகால சினிமா பயணத்தை மிகவும் எதிர்பாராத விதமாக தொடங்கியவர். கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, பள்ளி மாணவியாக இருந்த அவர் அனுபவத்திற்காக மட்டுமே அந்த வாய்ப்பை பெற்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் ‘லேசா லேசா’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா, மிஸ் சென்னை பட்டம் வென்றதன் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்நிலையில், ‘ஜோடி’ திரைப்படத்தின் இயக்குநர் பிரவீன் காந்தி, அந்த காலகட்டத்தில் திரிஷாவின் ஜாதகத்தை பார்த்தபோது, அவர் சினிமாவில் நீண்ட காலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும், எதிர்காலத்தில் முக்கியமான உயரத்தை அடைவார் என்றும் அவரது தாயாரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒருநாள் அவர் முதலமைச்சராகும் யோகம் கொண்டவர்” என தான் கணித்ததாகவும் பிரவீன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, திரிஷாவை அரசியலுக்கு வரவேண்டும் எனக் கோரி மதுரையில் முன்னதாக சில சுவரொட்டிகள் வெளியான நிலையில், தற்போது இந்தக் கருத்தும் இணையத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Click for more latest சினிமா news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.