முதல் டெஸ்ட் முடிந்தவுடன் நீக்கப்படவுள்ள 3 வீரர்கள்! கவுதம் கம்பீர் அதிரடி தீர்மானம்! என்ன நடந்தது?

இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு டாஸ் தோற்றது சாதகமாகவே அமைந்துள்ளது.

முதல் டெஸ்ட் முடிந்தவுடன் நீக்கப்படவுள்ள 3 வீரர்கள்! கவுதம் கம்பீர் அதிரடி தீர்மானம்! என்ன நடந்தது?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளு்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு டாஸ் தோற்றது சாதகமாகவே அமைந்துள்ளது.

சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால்  சதம் அடித்து அசத்தினார். கேப்டன் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோர் நல்ல ஒரு பாட்னர்ஷிப் கொடுத்தனர். இவர்கள் இருவருமே சதம் அடிக்க அணிக்கு நல்ல ஒரு ஸ்கோர் கிடைத்தது. 

ஆனால் அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த சாய் சுதர்சன், கருண் நாயர் ஆகியோர் ரன்கள் அடிக்க தவறினர். 

இந்நிலையில், அடுத்த டெஸ்ட் போட்டியில் சிராஜுக்கு பதிலாக ஹர்ஸ்தீப் சிங்கை கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாகவும், இரண்டாவது இன்னிங்ஸில் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் சொதப்பும் பட்சத்தில் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியா தொடரில் நன்றாக விளையாடியிருந்தாலும் முதல் போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற நிலையில், முதல் டெஸ்ட் போட்டியின் முடிவை வைத்தே, அடுத்த போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்பது தீர்மானிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது.