ஆசிய கோப்பையில் ரோகித், கோலிக்கு இடமில்லை.. ஐசிசி வைத்த டுவிட்ஸ்... காரணம் என்ன?

Key Points
  • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த மே மாதம் போர் பதற்றம் ஏற்பட்டதால், இனி இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாது என கூறப்பட்டது.
ஆசிய கோப்பையில் ரோகித், கோலிக்கு இடமில்லை.. ஐசிசி வைத்த டுவிட்ஸ்... காரணம் என்ன?

கடைசியாக 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த மே மாதம் போர் பதற்றம் ஏற்பட்டதால், இனி இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாது என கூறப்பட்டது.

தற்போது பதற்றம் தணிந்த நிலையில், ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் என தகவல் வெளியாகி வருகின்றது.

எனினும், ஆசிய கோப்பைக்கான அட்டவணை இதுவரை அதிகாரப்பூரவமாக வெளியிடப்படாத நிலையில், வரும் ஜூலை மாதம் வெளியிடப்படலாம்.

இந்த ஆசிய கோப்பை தொடர் நடைபெறுமா என்பது விரைவில் உறுதியாகிவிடும். அதேசமயம் தொடரை ஒருநாள் தொடராக இல்லாமல் டி20 தொடராக நடத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனால், ரோகித் சர்மா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பில்லை. 

நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டதால், இனி இந்திய டி20 அணியில் அவர்கள் இடம் பெற மாட்டார்கள். 

ஐசிசியின் விதிப்படி, ஆசிய கோப்பைக்கு நடத்தப்படும் ஆண்டுக்கு பிறகு முக்கிய ஐசிசி தொடர் எந்த வடிவில் நடக்கிறதோ அந்த வடிவில்தான் ஆசிய கோப்பையை நடத்த வேண்டும். 

அப்படி தான் கடந்த 2023 ஆசிய கோப்பையும் நடைபெற்றது. அதாவது, 2023ல் ஒருநாள் உலக கோப்பை  தொடர் நடைபெற்றது. அதற்கு முன்பாக நடந்த ஆசிய கோப்பை ஒருநாள் தொடராக நடந்தது. 

அதன்படி, 2026ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பை நடைபெற இருப்பதால், ஆசிய கோப்பை டி20 வடிவில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google