தோல்வியால் உடைந்து போன ஹர்திக்... கண்ணீர் சிந்தியவரை தேற்றிய ஆஸி வீரர்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!
பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்வியால் துவண்டு அழுதார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்வியால் துவண்டு அழுதார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், களத்தை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்த அந்த அணியின் பேட்ஸ்மேன் மார்க்கஸ் ஸ்டோனிஸ் அவரைத் தேற்றினார்.
இதேவேளை, வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு கை குலுக்கிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், மார்க்கஸ் ஸ்டோனிஸ், ஹர்திக் பாண்டியாவைத் தேற்றிய காட்சி ரசிகர்களை நெகிழ வைப்பதாக இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து இருபது ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. ஜானி பேர்ஸ்டோ 38 ரன்களும், திலக் வர்மா 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 44 ரன்களும், நமன் தீர் 18 பந்துகளில் 37 ரன்களும் எடுத்திருந்தனர்.
204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 55 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டம் ஆடினார்.
ஜோஸ் இங்கிலிஸ் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தும், நெஹால் வதேரா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.
இதை அடுத்து, 19 ஓவர்களில் எல்லாம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.