இரண்டாவது  டெஸ்டில் இந்திய அணியில் களமிறங்கும் அதிரடி டி20 வீரர்... கில்லின் மாஸ்டர் பிளான்!

இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் முக்கிய பங்காற்றிய ஆர்ஸ்தீப், தனது முதல் டெஸ்ட் அறிமுகத்தை பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. 

இரண்டாவது  டெஸ்டில் இந்திய அணியில் களமிறங்கும் அதிரடி டி20 வீரர்... கில்லின் மாஸ்டர் பிளான்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தோற்ற இந்திய அணி, 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்க உள்ளதுடன், இந்திய அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி வீரர்கள் நீண்ட நேரம் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டதுடன்,  ஆர்ஸ்தீப் சிங் இன்னும் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகவில்லை.

இந்த நிலையில், அவர் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் உடன் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றார். இதனால், அடுத்த போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இந்தியா இதுவரை எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா  விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

இதனால், இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் முக்கிய பங்காற்றிய ஆர்ஸ்தீப், தனது முதல் டெஸ்ட் அறிமுகத்தை பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. 

அத்துடன், இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உள்ளதுடன், கவுண்டி கிரிக்கெட்டில் ஆர்ஸ்தீப் சிறப்பாக செயல்பட்டு இருப்பதால், அவருக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையலாம்.

பும்ரா முன்னதாக இந்தத் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று கூறியிருந்தார். முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் இந்தியாவின் கீழ் வரிசை பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவு தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

இதனால், இரண்டாவது போட்டியில், இந்திய அணியின் கீழ் வரிசை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில், கருண் நாயர், சாய் சுதர்சன் உள்ளிட்டோர் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.