இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்: ரெய்னா வெளியிட்டுள்ள கணிப்பு; சரி வருமா?

இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்: ரெய்னா வெளியிட்டுள்ள கணிப்பு; சரி வருமா?

இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளங்கினாலும், இந்த தொடரிலும் அவர் மோசமாக கேப்டன்ஷிப் செய்து வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறை கூறியுள்ளனர்.

இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த கேப்டனாக வரும் வாய்ப்பு குறைந்து விட்டதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினேஷ் கார்த்திக் செய்த ஒரே ஒரு தவறு... உலக கோப்பை அணியில் இடம் போச்சு...!

இந்த நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் வருவார் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் சுரேஷ் ரெய்னா இதற்கு பதில் அளித்துள்ளார்.

இந்தியாவின் அடுத்த கேப்டனாக வர சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு இருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

கேப்டனாக கில் நன்றாக செயல்படுவதுடன் பேட்டிங்கிலும் அதிரடி காட்டி வருவதாக கூறிய அவர், 23 வயதான கில் நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

7 போட்டிகளில் விளையாடிய கில் 263 ரன்கள் குவித்து உள்ள போதும், குஜராத் அணி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர