போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்; அதிபர் அதிர்ச்சி தகவல்

பிரபல பெண்கள் பாடசாலையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்; அதிபர் அதிர்ச்சி தகவல்

கொழும்பின் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை விசாரணை செய்துள்ளனர்.

இரு மாணவிகளே இந்த போதைப்பொருள் மாத்திரிகைகளை மட்டக்குளிய பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஒர் நபரிடம் அடிக்கடி வாங்கி பாடசாலைக்கு கொண்டு வருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்தது.

மேற்படி மாணவிகள் குளிசைகளை பாடசாலையின் கழிவறைக்குச் சென்று அருந்துவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பாடசாலையின் அதிபர், மருதானை பொலிஸாருக்கு தொலைபேசி  ஊடாக எடுத்து முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் மாணவிகள் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர