சதம் அடித்த இஷான் கிஷனுக்கு தடை – பிசிசிஐ ஏன் முட்டுக்கட்டை போடுகிறது? வெளியான தகவல்!

இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்து வரும் இஷான் கிஷன், சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அசத்தலான சாதனை படைத்தார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
சதம் அடித்த இஷான் கிஷனுக்கு தடை – பிசிசிஐ ஏன் முட்டுக்கட்டை போடுகிறது? வெளியான தகவல்!

இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்து வரும் இஷான் கிஷன், சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அசத்தலான சாதனை படைத்தார். ஜார்கண்ட் அணியின் கேப்டனாக விளையாடிய அவர், இறுதிப் போட்டியில் 49 பந்துகளில் 101 ரன்கள் – 6 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் – அடித்து அசத்தினார்.

இந்த அசத்தலான நூறு, தொடரின் வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த ஸ்கோராக பதிவானது. இதன் மூலம் ஜார்கண்ட் அணி தனது முதல் கோப்பையையும் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியானாவை வீழ்த்தி வென்றது.

மொத்தத்தில் 10 போட்டிகளில் 57.44 சராசரியில் 517 ரன்கள் குவித்த இஷான் கிஷன், 33 சிக்ஸர்களை அடித்து மகேந்திர சிங் தோனி, நிகோலஸ் பூரன் ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளினார். இத்தகைய சாதனைகள் இருந்தாலும், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பது தொடர்ந்து சந்தேகமாகவே உள்ளது.

காரணம், 2023 இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்காததை அடுத்து, ஓய்வு தேவை என்று கூறி உடனடியாக நாடு திரும்பியதுதான். ஆனால், நாடு திரும்பிய உடனேயே அவர் ஐபிஎல் பயிற்சியில் ஈடுபட்டார். இது பிசிசிஐக்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

பிசிசிஐ அவரை உள்ளூர் கிரிக்கெட்டில் ஈடுபட அழைத்தாலும், அவர் இரண்டு முறை அதை நிராகரித்தார். இதனால், கோபமடைந்த பிசிசிஐ அவருக்கு அணியில் இருந்து தண்டனை விதித்தது. உள்ளூர் போட்டிகளில் ஆட மறுக்கும் வீரர்களுக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின் பின்னர்தான், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் திரும்பினர்.

இஷான் கிஷனின் சமீபத்திய சாதனைகள் பாராட்டுக்குரியவை என்றாலும், பிசிசிஐயின் முடிவு மாறாத நிலையில், அவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. பிசிசிஐ இஷானின் மீது விதித்துள்ள இந்த தண்டனை, மற்ற வீரர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர