2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட இளம் வீரர் இந்திய அணியில் இணைந்தார் – காரணம் சர்பரைஸ் தேர்வா?

2023 இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பிளேயிங் லிஸ்டில் இடம்பெறாத காரணத்தால், “மன அழுத்தம்” என்ற காரணத்தை முன்னிட்டு இஷான் கிஷன் தனிப்பட்ட முறையில் நாடு திரும்பினார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட இளம் வீரர் இந்திய அணியில் இணைந்தார் – காரணம் சர்பரைஸ் தேர்வா?

இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிசிசிஐ அளித்த இரண்டு ஆண்டுகள் கால தடையின் பின்னர், தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த மீட்பு, வேறு வழியில்லாத நிலையில் எடுக்கப்பட்ட முடிவாக விளங்குகிறது.

2023 இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பிளேயிங் லிஸ்டில் இடம்பெறாத காரணத்தால், “மன அழுத்தம்” என்ற காரணத்தை முன்னிட்டு இஷான் கிஷன் தனிப்பட்ட முறையில் நாடு திரும்பினார். அதன் பிறகு, உள்ளூர் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ இருமுறை கேட்டும், அவர் அதனை புறக்கணித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, அவரை அனைத்து தேசிய அளவிலான தேர்வுகளிலிருந்தும் விலக்கியது.

இருப்பினும், இஷான் கிஷன் தளரவில்லை. தமிழ்நாட்டில் நடைபெற்ற புச்சி பாபு தொடர் உட்பட, பல உள்ளூர் மற்றும் கவுண்டி தொடர்களில் தொடர்ந்து ஆடி, தனது பார்மை நிரூபித்தார். குறிப்பாக, சமீபத்திய சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், ஜார்கண்ட் அணிக்குத் தலைமை தாங்கி, 10 போட்டிகளில் 500+ ரன்கள் குவித்து, கோப்பையையும் வென்று கொடுத்தார்.

இந்நிலையில், முன்னணி ஓபனர் ஷுப்மன் கில் தொடர்ந்து பார்ம் இழந்து வருவதும், ரிஷப் பந்த் முக்கியமாக டெஸ்ட் பார்மெட்டில் சிறந்து விளங்குவதும், இஷான் கிஷனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட முக்கிய காரணங்களாக உள்ளன. டி20 பார்மெட்டில் அவரது சமீபத்திய சாதனைகள் கருதி, இந்திய அணியில் பேக்கப் விக்கெட் கீப்பர் என்ற பாத்திரத்தில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இருப்பினும், அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-இல் சஞ்சு சாம்சன்தான் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இஷான் கிஷனுக்கு உண்மையான வாய்ப்பு கிடைக்காமல், இந்தத் தொடர் முடிந்தவுடன் மீண்டும் ஷுப்மன் கில் ஓபனர் பொறுப்பை மீட்கலாம் என தெரிகிறது.

இந்தத் தேர்வு, இந்திய அணியின் பாரம்பரியமான “சர்பரைஸ் தேர்வு” மரபின் அடுத்த பகுதியாகவும் கருதப்படுகிறது – 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் விஜய் சங்கர், 2021 டி20 உலகக் கோப்பையில் அஸ்வின், 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் புஜாரா போன்றோர் மூலம் நிரூபிக்கப்பட்டது போல.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர