அமெரிக்க சமாதானத் திட்டத்திற்கு மறுப்பு: ஜெலென்ஸ்கி “தயாராக இல்லை” – ட்ரம்ப் விமர்சனம்

சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போதே ரஷ்யா உக்ரைன் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அமெரிக்க சமாதானத் திட்டத்திற்கு மறுப்பு: ஜெலென்ஸ்கி “தயாராக இல்லை” – ட்ரம்ப் விமர்சனம்

ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்துள்ள சமாதானத் திட்டத்தில் கையெழுத்திட உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி “தயாராக இல்லை” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிர்வாகத்தின் சமாதான முயற்சியின் கீழ், அமெரிக்காவும் உக்ரைனும் இடையே மூன்று நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ட்ரம்ப் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி நகர்த்துவதைத் தடுத்து நிற்கிறார் என விமர்சித்தார்.

“ஜெலென்ஸ்கி இன்னும் அந்தத் திட்டத்தைக் கூடப் படிக்கவில்லை. அது எனக்கு சற்று ஏமாற்றமாக இருக்கிறது,” என்று ட்ரம்ப் கூறினார். மேலும், “உக்ரைன் மக்கள் இந்த சமாதானத் திட்டத்தை விரும்புகிறார்கள், ஆனால் அவர் (ஜெலென்ஸ்கி) அதை விரும்பவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போதே ரஷ்யா உக்ரைன் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.