சூர்யகுமார் யாதவுக்கு அதிர்ச்சி: ரஞ்சி அணியில் இருந்து அதிரடி நீக்கம் - டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?

இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், வரவிருக்கும் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நீக்கம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


சூர்யகுமார் யாதவுக்கு அதிர்ச்சி: ரஞ்சி அணியில் இருந்து அதிரடி நீக்கம் - டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலிய தொடருக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவருக்கு மிகப்பெரிய ஒரு இடி வந்து இறங்கியுள்ளது. அக்டோபர் 15-ஆம் தேதி துவங்கவிருக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், அவர் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதேபோன்று, இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடிய அவர், அதில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, அவர் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்படவே இல்லை.

ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மும்பை அணியின் தேர்வு குழு தலைவரான சஞ்சய் பாட்டில் மற்றும் தீலிப் வெங்சர்கார் ஆகியோர் அறிவித்த இந்த அணியில், சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு இடம் கிடைத்துள்ளது. மேலும், ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

35 வயதான சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதால், அவரை இனி ரஞ்சி அணியில் சேர்க்க வேண்டாம் என்ற முடிவை மும்பை நிர்வாகம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், 15 ஆண்டுகள் நீடித்த சூர்யகுமார் யாதவின் ரஞ்சி கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவரை 86 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 14 சதங்கள் மற்றும் 30 அரை சதங்களுடன் 5758 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 42 ஆக உள்ளது. கடைசியாக கடந்த சீசனில் விதர்பாவுக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சி அரையிறுதிப் போட்டியில் விளையாடிய அவர், முதல் இன்னிங்ஸில் 23 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆனார். அந்த சீசனில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடி 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார், அவரது சராசரி 21 ஆக குறைந்தது.

இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் போதிலும், சூர்யகுமார் யாதவ் மும்பை டெஸ்ட் (ரஞ்சி) அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இது அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலத்தின் முடிவாக இருக்குமா அல்லது டி20 கிரிக்கெட்டில் அவர் இன்னும் முழுமையாக கவனம் செலுத்த வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google