டீசல் விலை உயர்வு: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து கட்டணத்தை இன்று (10) முதல் 5 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் விலை உயர்வு: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து கட்டணத்தை இன்று (10) முதல் 5 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, கடந்த காலங்களில் எரிபொருள் விலை பலமுறை உயர்ந்த போதிலும் நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என கூறினார்.

ஆனால் இம்முறை டீசல் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து சேவையை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஏனைய போக்குவரத்து சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, புதிய கட்டண திருத்தம் இன்று (10) முதல் அமலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் போக்குவரத்து துறையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். உதாரணமாக, ஒரு மாணவருக்கான மாதாந்திர கட்டணம் 10,000 ரூபாவாக இருந்தால், அது 500 ரூபாவால் அதிகரிக்கும் என்றும் அவர் விளக்கினார். விருப்பம் இல்லாவிட்டாலும் சூழ்நிலை காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டியதாகி விட்டதாகவும் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.