திருப்பி அடிக்கும் ஈரான்... இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்
ஈரானிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிக்கும் வகையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Israel மற்றும் Iran இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இஸ்ரேலை இலக்காகக் கொண்டு புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த மோதல் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதுடன், உலக நாடுகளையும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.
United States உடன் இணைந்து Israel, பெப்ரவரி 28 ஆம் தேதி Iran மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலைமை தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது, ஈரானிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிக்கும் வகையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் கைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக Al Jazeera செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இந்த நேரடி மோதல் நிலைமை காரணமாக பிராந்தியத்தில் பாதுகாப்பு கவலைகள் அதிகரித்துள்ளன. பல நாடுகள் தங்களது வான்வெளிகளை தற்காலிகமாக மூடியுள்ளதால் சர்வதேச விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
