ஈராக் வான்பரப்பில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்தியதாக ஒரு ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது.
ஈரானிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிக்கும் வகையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் கடற்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் பிற ராணுவ வளங்கள் தொடர்பான உளவு தகவல்களும் ஈரானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.