அமெரிக்கா வரும்போது நெதன்யாகு கைது செய்யப்பட மாட்டார்: ட்ரம்ப் உறுதி
அமெரிக்கா வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எந்த சூழலிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வமாக வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எந்த சூழலிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நெதன்யாகு அமெரிக்காவில் இருக்கும் காலம் முழுவதும் அவருக்கு எதிராக எந்தவித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது" என்று ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UN General Assembly) கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா செல்ல உள்ளார்.
இதற்கு முன்னதாக, நெதன்யாகுவின் வருகையின்போது அவரைக் கைது செய்வதற்கான சட்ட வாய்ப்புகள் குறித்து நகர நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி தெரிவித்திருந்தார். இந்த பின்னணியிலேயே ட்ரம்பின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஈரான் தொடர்பாகவும் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "ஈரான் ஆதரவு நடவடிக்கைகளால் ஒரு அமெரிக்க வீரர் உயிரிழந்தால், அதற்கான பதில் நடவடிக்கை பல மடங்கு வலுவாக இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த உத்தரவு அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் டானியல் கேன் மற்றும் அமெரிக்க ஆயுதப்படைகளின் உயர்மட்ட தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.