கடலில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பல்: 80 உடல்கள் மீட்பு; 35 பேர் உயிர் தப்பினர் - இலங்கை அருகே பயங்கரம்!
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ தாக்குதலில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் தேனா' (IRIS Dena) சிதைவுகளிலிருந்து இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ தாக்குதலில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் தேனா' (IRIS Dena) சிதைவுகளிலிருந்து இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் உச்சத்தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போரின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. இந்தக் கப்பலில் சுமார் 180 பேர் வரை இருந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், கடலில் தத்தளித்த சுமார் 35 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு சிகிச்சைக்காகக் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
