இரானின் பாடசாலை தாக்குதல் குறித்து விசாரணை நடைபெறுகிறது – ட்ரம்ப்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டோமஹாக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அதனை இரான் உள்ளிட்ட பல நாடுகள் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.

இரானின்  பாடசாலை தாக்குதல் குறித்து விசாரணை நடைபெறுகிறது – ட்ரம்ப்

இரானின் மினாப் பகுதியில் உள்ள இராணுவத் தளத்துக்கு அருகிலுள்ள ஆரம்பப் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 168 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 110 பேர் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இந்த சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் டோமஹாக் ஏவுகணைகள் பல நாடுகளால் பயன்படுத்தப்படுகின்றன என அவர் கூறினார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டோமஹாக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அதனை இரான் உள்ளிட்ட பல நாடுகள் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.

பின்னர், அமெரிக்க நிர்வாகத்தில் வேறு யாரும் இவ்வாறு கருத்து தெரிவிக்காத நிலையில், மற்றொரு நாடு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பயன்படுத்தியிருக்கலாம் என கூறுபவர் தாங்கள் மட்டுமே என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில், நிபுணர்கள் தெரிவித்ததாவது, இஸ்ரேல் அல்லது  இரான் ஆகிய நாடுகளிடம் டோமஹாக் ஏவுகணைகள் இருப்பதாகத் தெரியவில்லை என முன்பே கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “இந்த சம்பவம் குறித்து எனக்கு போதுமான தகவல்கள் இல்லை. அதனால் தான் விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

மேலும், “அந்த விசாரணை அறிக்கை எதை வெளிப்படுத்தினாலும் அதை நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.