இந்திய டெஸ்ட் கேப்டன் பதவி: தமிழனுக்கு தகுதி இல்லையா? அஸ்வினுக்கு ஏன் வழங்கவில்லை!

இந்திய அணியின் கேப்டன் பதவியை பும்ராவுக்கு வழங்குவதற்கான தீர்மானம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Nov 19, 2024 - 12:30
இந்திய டெஸ்ட் கேப்டன் பதவி: தமிழனுக்கு தகுதி இல்லையா? அஸ்வினுக்கு ஏன் வழங்கவில்லை!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவிர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தால் அவர் மனைவியுடன் நேரம் செலவிட விரும்புகிறார்.

இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் பதவியை பும்ராவுக்கு வழங்குவதற்கான தீர்மானம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

அஸ்வினுக்கு கேப்டன் பதவி கிடைக்காதது – ஏன்?

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 536 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆறு சதங்களை அடித்திருக்கும் அஸ்வின், உலகளவில் ஒரு மிக முக்கியமான டெஸ்ட் வீரராக திகழ்கிறார். பல்வேறு உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தனது கேப்டன்சியால் அணியை வெற்றி நோக்கி கொண்டு சென்ற அனுபவமும் அவருக்கு உண்டு.

அஸ்வின் தமிழர் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்ற எண்ணம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்ப்ளேவுக்கு அவரது கடைசி காலத்தில் கேப்டன் பதவி கிடைத்தது போல், அஸ்வினுக்கும் அந்த கௌரவத்தை வழங்காமல் பிசிசிஐ தவறு செய்துள்ளதாக தமிழ்நாட்டு ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

பும்ராவுக்கு முன்னுரிமை – சரியா?

ஜஸ்பிரித் பும்ரா, இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு திறமையான பந்துவீச்சாளராக திகழ்கிறார். ஆனால் அவர் ஒரு ஜூனியர் வீரர் என்பது மறுக்க முடியாத உண்மை. அனுபவம் குறைவாக இருந்தபோதும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதை சிலர் வரவேற்றாலும், மற்றவர்கள் அதைப் பெரிதும் எதிர்க்கின்றனர்.

ரசிகர்களின் கோரிக்கை

இந்த சூழலில், அஸ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டுமென்ற ரசிகர்களின் அழுத்தம் அதிகரித்து வருகிறது. "அஸ்வின் மட்டுமே இந்திய டெஸ்ட் அணியை சரியான திசையில் கொண்டு செல்ல முடியும்" என்பதே பலரின் கருத்தாகும்.

தமிழனுக்கான வாய்ப்பு

தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி, அஸ்வினின் திறமையைப் பாராட்டும் கிரிக்கெட் ஆர்வலர்களும், அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தமிழ் வீரர்களுக்கு கிரிக்கெட் நிர்வாகத்தில் உரிய இடம் வழங்கப்படுவது பற்றிய விவாதமும் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பிசிசிஐ எந்தவித பதிலளை வழங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.  அஸ்வின் மற்றும் தமிழர்களின் உரிமைக்கு நீதியை வழங்குமா இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!