மழையால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. டிராவில் முடிந்த போட்டி... ஆஸ்திரேலியாவுக்கு செம டுவிஸ்ட்!

Key Points
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளதால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மழையால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. டிராவில் முடிந்த போட்டி... ஆஸ்திரேலியாவுக்கு செம டுவிஸ்ட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளதால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளர் செய்ததுடன், இந்திய அணிக்கு 275 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, இந்திய அணி 2.1 ஓவர்கள் ஆடிய நிலையில் கடும் மழை பெய்ததுடன், போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால், போட்டி டிராவில் முடிந்ததாக நடுவார்கள் அறிவித்தனர்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்ததுடன், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்தாம் நாள் அன்று இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய அணி 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளர் செய்தது.

இதனையடுத்து, இந்திய அணிக்கு 275 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டதுடன்,  53 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 260 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்த நிலையில், ஐந்தாம் நாளின் இரண்டு பகுதி ஆட்டம் மட்டுமே மீதமிருந்தது.

ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விரைவாக ரன் சேர்த்து இந்திய அணிக்கு 300 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்க முயற்சித்தது. ஆனால், 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளர் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google