டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணியில் அதிரடி மாற்றம் – சூர்யகுமார் யாதவ் விளக்கம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நிகழக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்சத்திர ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணியில் அதிரடி மாற்றம்  – சூர்யகுமார் யாதவ் விளக்கம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நிகழக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்சத்திர ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் இந்த இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியைச் சுற்றி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக கவனத்துடன் விளையாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கடந்த சில போட்டிகளில் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை எதிரணிகள் எளிதாக கணித்து விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் வீசிய 4 ஓவர்களில் 64 ரன்கள் வழங்கியிருந்தார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல் 13 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் அவரது பந்துவீச்சை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான அணியில் வருண் சக்கரவர்த்தியின் இடத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதுகுறித்து பேசுகையில், வருண் சக்கரவர்த்தியின் ஃபார்ம் குறித்து அணிக்கு எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி டி20 பந்துவீச்சாளர்களில் ஒருவரான அவர் அணியின் வெற்றிக்கு எவ்வாறு பங்களிக்க வேண்டும் என்பது நன்றாக அறிந்தவர் என்றும், அணியின் முழு கவனம் வெற்றியில் மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.

மேலும், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்குவது மிகப்பெரிய பெருமை என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை இந்த உலகக்கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.