“இந்த நிபந்தனைகள் OK என்றால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம்” - ஈரான் அறிவிப்பு
ஈரானிய ஜனாதிபர் மசூத் பெசஸ்கியன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெறும் வளைகுடா போரின் முடிவுக்கான மூன்று நிபந்தனைகளை அறிவித்து, பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்தினார்.
ஈரானிய ஜனாதிபர் மசூத் பெசஸ்கியன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெறும் வளைகுடா போரின் முடிவுக்கான மூன்று நிபந்தனைகளை அறிவித்து, பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்தினார்.
அவர் கூறியபடி, போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரித்தல் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை வழங்குதல் ஆகியவையே போர் நிறுத்தத்திற்கு அடிப்படையான நிபந்தனைகள்.
இதோடு, குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா மீது நடைபெற்ற ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நிறுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ரஷியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசியபோது, ஈரான் அமைதிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 13 நாட்களாக நிலவிவரும் இந்த போர், உலகளாவிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
