லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை: திருமணமாகி ஒரு வருடத்தில் ஏற்பட்ட துயரம்
லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இந்த இளைஞர், திருமணமாகி சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில் இந்த துயரத்தை சந்தித்துள்ளார்.
கடந்த 30 அன்று லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி 3 ஆம் தேதி பரிதாபமாக காலமானார்.
இந்த கொலை சம்பவத்தில் கறுப்பின இளைஞர்கள் சிலர் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து லண்டன் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கண்டறியும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த இளம் குடும்பஸ்தரின் மரணம், குடியேற்ற நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்தில் பாதுகாப்பு மற்றும் சட்ட முறை குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
