ஈரான் உச்ச தலைவர் கமேனி வான்வழித் தாக்குதலில் பலி: அமெரிக்கா - இஸ்ரேல் அதிரடி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் உச்ச தலைவர் கமேனி வான்வழித் தாக்குதலில் பலி: அமெரிக்கா - இஸ்ரேல் அதிரடி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, நேற்று ஈரான் மீது அதிரடித் தாக்குதலைத் தொடங்கியது. குறிப்பாக, கமேனி தங்கியிருந்த இடத்தையே இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் குண்டுமழை பொழிந்தன.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, "உலகின் மிக மோசமான தீய மனிதர் கொல்லப்பட்டுவிட்டார்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் ஈரான் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராத நிலையில், தற்போது கமேனி உயிரிழந்ததை அந்த நாடு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக ஈரானில் 40 நாட்கள் துக்க காலமாகவும், ஒரு வாரத்திற்குத் தொடர் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.