கனமழை எச்சரிக்கை! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை (வியாழக்கிழமை, 04.12.2025) அன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கனமழை எச்சரிக்கை! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை (வியாழக்கிழமை, 04.12.2025) அன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையின் அடிப்படையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (04.12.2025) கனமழை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி

மேலே குறிப்பிட்ட கனமழை எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில், நாளை பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை காலையில் வெளியிடப்படும் என தெரிகிறது.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், தங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அல்லது தொடர்புடைய அதிகாரிகளிடம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் சரிபார்க்க வேண்டும்.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.