உலகம்

மலேசிய முன்னாள் அமைச்சர் எம். சரவணன் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிமன்றத்தில் விசாரணை!

மலேசியாவின் முன்னாள் மனிதவள அமைச்சர் எம். சரவணன், 2022–ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது 1,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்காக சுமார் 1 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாகக் கூறப்படும் 3 குற்றச்சாட்டுகளில் கோலாலாம்பூர் நீதிமன்றத்தில் விசாரணை எதிர்கொள்கிறார்.

மலேசிய முன்னாள் அமைச்சர் எம். சரவணன் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிமன்றத்தில் விசாரணை!

மலேசியாவின் முன்னாள் மனிதவள அமைச்சர் எம். சரவணன் இன்று கோலாலாம்பூர் நீதிமன்றத்தில் ஊழல் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். 2022–ஆம் ஆண்டு அவர் மனிதவள அமைச்சராகப் பதவி வகித்தபோது, சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் (தோராயமாக ₹2 கோடி அல்லது 3,46,000 வெள்ளி) கையூட்டு பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளின் விவரம்:

2022ஆம் ஆண்டு, சரவணன் அமைச்சராக இருந்தபோது, 1,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்காக, TYKB Engineering நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிறைவேற்ற, Vectica Resources நிறுவனத்தின் இயக்குநர் டான் டெக் லிம் இந்தப் பணத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த பணம் மற்றொருவர் மூலம் சரவணனுக்கு சென்றடைந்ததாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

2022 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மூன்று கட்டங்களாக இந்த பணம் வழங்கப்பட்டதாக FMT ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முதல் இரு முறை பணம் ரொக்கமாகவும், பின்னர் ஒரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் காசோலை மூலமாகவும் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

58 வயதான சரவணன், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, முழு விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு வேலை என ஏமாற்றி மதுக்கடை அடிமையாக விற்கப்பட்ட  பெண் - 8 பேர் மீது வழக்கு

விசாரணையின் போது, அரசுத் தரப்பு 8,00,000 ரிங்கிட் (தோராயமாக 2,53,000 வெள்ளி) பிணைத் தொகையும், அவரது கடப்பிதழை (பாஸ்போர்ட்) முடக்கவும் கோரியது. எனினும், நீதிமன்றம் 4,50,000 ரிங்கிட் (தோராயமாக 1,42,000 வெள்ளி) பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டது. மேலும், அவரது கடப்பிதழை முடக்குவதற்கான கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இருப்பினும், சரவணன் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் சரணடைந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 29–ஆம் தேதி நடைபெற உள்ளது. இது மலேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்காகப் பார்க்கப்படுகிறது.

கொழும்புதமிழ் WhatsApp சேனலில் இணையுங்கள்

உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச செய்திகள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் குறித்த செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது.

எங்கள் நெட்வொர்க்:
ahafm malaioli seithi news21 colombotamil cinema