அமெரிக்கா-ஈரான் இடையே 60 நாள் அமைதி ஒப்பந்தம் இன்றுடன் நிறைவு – மீண்டும் போர் பதற்றம் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைகிறது. ஒப்பந்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஆர்வம் காட்டாததால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அமெரிக்கா-ஈரான் இடையே 60 நாள் அமைதி ஒப்பந்தம் இன்றுடன் நிறைவு – மீண்டும் போர் பதற்றம் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் போர் நிறுத்தத்திற்காக கையெழுத்திடப்பட்ட 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து இரு நாடுகளும் ஆர்வம் காட்டாததால், மீண்டும் போர் பதற்றம் தலைதூக்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்தன. இந்தப் போர் மூன்று மாதங்கள் மிகத் தீவிரமாக நீடித்தது. இறுதியில், கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானின் முன்னிலையில் நடந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளும் உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது, 60 நாட்களுக்குள் நிரந்தர அமைதி உடன்படிக்கையை எட்டுவது, ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்குவது, முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பது, மற்றும் ஈரான் அணு ஆயுதங்களை கைவிடுவது ஆகிய முக்கிய நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் ஜூன் மாத இறுதியில் இருந்தே, இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மீறி பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தத் தொடங்கின. டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீதான தடைகளை முழுமையாக நீக்கவில்லை. மேலும், ஈரானுக்கு மறுசீரமைப்பு நிதியை வழங்க முடியாது என டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஈரானின் நடவடிக்கைகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாகவும் அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம் செல்லாது என்று ஈரான் அறிவித்தது. இதனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் கூட நடக்கவில்லை. சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், ஜூன் மாத ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களை அதிகரித்து வருகிறது.

மீண்டும் இரு நாடுகளும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளுமா, அல்லது மீண்டும் போரில் ஈடுபடுமா என்ற பதற்றம் மத்திய கிழக்கில் நீடிக்கிறது. இந்தப் போரில் இரு தரப்பிற்குமே ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைக்கு பெரிய சண்டை இல்லாமல் இரு தரப்பும் மவுனம் காக்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்ற முடிவு கிடைக்கும் வரை, விட்டு விட்டுப் போர் நீடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.